districts

img

புதுவையில் பஞ்சாலைகளை மூடுவதை கைவிட வேண்டும்: சிஐடியு

 புதுச்சேரி, மார்ச் 24- அமைப்பு சாரா நல வாரியத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி புதுச்சேரி சட்டப்பேரவை அருகில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்புசாரா நல வாரியத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து,  நலவாரியத்தை செயல்படுத்த வேண்டும், கட்டுமானத் தொழி லாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3000 என்பதை உறுதிப்படுத்த வேண்டும்,  புதுச்சேரியின் மூன்று பாரம்  பரிய பஞ்சாலைகளை மூடுவதற்கான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகள் வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு  மாநிலத் தலைவர் பிரபுராஜ் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் வெ.பெருமாள் துவக்கி வைத்தார். சிஐடியு மாநில செயலாளர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக காம ராஜர் சிலையிலிருந்து ஊர்வலம் புறப்பட்டது.