districts

புதுச்சேரியில்  இசை, நாட்டிய விழா

புதுச்சேரி, மார்ச் 3- புதுவை அரசு கலை பண்பாட்டுத் துறையும், தஞ்சை தென்னக பண்பாட்டு மையமும் இணைந்து இசை நாட்டிய விழா, சிறுவர் இசை நாட்டிய விழா, அவ்வையார் விழா, சங்கரதாஸ் சுவாமிகள் நாடக விழா ஆகியவற்றை நடத்துகிறது.வருகிற 16 ஆம் தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.  இதன் தொடக்கவிழா புதுவை கடற்கரை சாலையில் நடைபெற்றது. முதலமைச்சர் ரங்கசாமி விழாவை மணியடித்து தொடங்கி வைத்தார். கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் கந்தன், தஞ்சை தென்னக பண்பாட்டுத்துறை இயக்குநர் பாலகிருஷ்ணன், அரசு செயலர் கேசவன், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சந்திரபிரியங்கா, சபா நாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.