districts

img

75ஆவது சுதந்திரதினம்: புதுவையில் சிறப்பு ஏற்பாடு

புதுச்சேரி, ஜூலை 22- இந்திய சுதந்திர தினத்தின் 75ஆம் ஆண்டு விழாவை புதுச்சேரியில் கோலாகலமாக கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ரங்கசாமி கூறினார். இந்திய சுதந்திர தினத்தின் 75ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் புதுச்சேரி அரசு சார்பில் துண்டு பிரசுரத்தை சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 22) முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றி இந்திய சுதந்திர தினத்தை கொண்டாட அறைகூவல் விடுத்தார். இதற்காக அங்கன்வாடி, பாண்லே பாலகத்தில் குறைந்த விலையில் தேசியக் கொடி விற்கப்படும். புதுச்சேரியில் உள்ள மூன்றேகால் லட்சம் வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 75ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி அரசின் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இச்சந்திப்பின்போது சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு செயலர் உதயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.