districts

img

3 குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தாதே: புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, ஜுன் 27- ஒன்றிய அரசின் புதிய 3 குற்றவியல்  சட்டங்களை அமல்படுத்துவதை கண்டித்து புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஒன்றிய பாஜக அரசால் கடந்த டிசம்பர் 2023 ஆம் ஆண்டு, மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்களை   இடைநீக்கம் செய்து, மக்களிடம், வழக்கறிஞர்களிடம் கருத்து கேட்காமல் கொண்டுவரப்பட்ட 3 குற்றவியல் நடைமுறை சட்டத்தை நிறுத்தி  வைக்க கோரி இப்போராட்டம் நடை பெற்றது. இந்தியா கூட்டணி கட்சிகளின் வழக்கறி ஞர்கள் சங்கங்களின் சார்பில் புதுச்சேரி நீதி மன்ற வளாகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மூத்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.ஜீவானந்தம் தலைமை தாங்கி னார். முன்னாள் முதலமைச்சர் வே.நாராயண சாமி கலந்து கொண்டு போராட்டத்தை வாழ்த்தி பேசினார்.  

காங்கிரஸ் வழக்கறிஞர் அணி தலைவர் மருதுபாண்டியன், திமுக வழக்கறிஞர் அணி  பொறுப்பாளர் பரிமளம், சிபிஐ வழக்கறிஞர்  அணி தலைவர் ரஷீத், அகில இந்திய வழக்கறி ஞர் சங்க செயலாளர் சரவணன், விசிக  வழக்கறிஞர் அணி தலைவர் கார்த்திகேயன், மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் லெனின் துரை, லோகநாதன், கோவிந்தராஜன், கதிரேசன், பாலசுந்தரம் என திரளான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.