புதுக்கோட்டை, ஏப்.22 - முதலமைச்சரின் மாநில இளைஞர் விரு திற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக் கலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, ‘முதலமைச்சர் மாநில இளைஞர் விருது’ ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத் தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது, ரூ.1,00,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கி யதாகும். அதன்படி 2022 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது 15.8.2022 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி 2022 (1.4.2022) அன்று 15 வயது நிரம்பியவராகவும், மார்ச் 31 ஆம் தேதி 2022 (31.3.2022) அன்று 35 வயதுக் குள்ளாகவும் இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் (2021-2022) அதாவது 1.4.2021 முதல் 31.3.2022 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும் (சான்று இணைக்கப்பட வேண்டும்.) விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும்.
அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்றியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுப வர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இய லாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களி டம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீல னையில் கணக்கில் கொள்ளப்படும். விண்ணப்பங்களை தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணைய தளமான www.sdat.tn.gov.in, http://www. sdat.tn.gov.in மூலம் மட்டுமே சமர்ப்பித்தல் வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப் பிக்க கடைசி நாள் 10.5.2022 மாலை 4 மணி வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது.