புதுக்கோட்டை, ஜூலை 28 - உலகத்தையே ஒரு புத்தகமாகப் படிக்க வேண்டும் என்றார் திரைப்பட இயக்குநர் போஸ் வெங்கட்.
புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வின் முதல் நாள் நிகழ்ச்சியில் சனிக் கிழமை மாலை ‘இளைஞர்களும் சினிமாவும்’ என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியதாவது:
எந்த ஒரு சூழலிலும் தன்னம்பிக்கை யைக் கைவிடக் கூடாது. தற்கொலை செய்து கொள்ளப் போகும் நேரத்தி லும்கூட, சாவதைக் காட்டிலும் வாழ்ந்து விட்டுச் செல்வது எளிதானது என்ப தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
படைப்பாளிகள் ஒவ்வொருவரின் பேச்சைக் கேட்கும் போது ஒரு புத்த கத்தைப் படித்ததாக பொருள். அதே போன்று உலகத்தையே ஒரு புத்தக மாகப் படிக்க வேண்டும். அது வெவ் வேறு நாடுகளின் மக்களையும், அவர்க ளின் கலாச்சாரத்தையும், வாழ்க்கை முறையையும் நமக்குக் கற்றுத்தரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சிக்கு, தொழிலதிபர் அருண் சின்னப்பா தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா வாழ்த்திப் பேசினார். முன்ன தாக அ.மணவாளன் வரவேற்றார். ஈ. சன்பவுனம்மாள் நன்றி கூறினார்.