districts

img

நாடு முழுவதும் செங்கொடி இயக்கத்திற்கு உத்வேகம் அளிக்கும் வாச்சாத்தி

புதுக்கோட்டை, பிப்.21 - வாச்சாத்தி தொடர்பான போராட்டங் களும், குற்றவாளிகளுக்குப் பெற்றுத் தந்த தண்டனையும் நாடுமுழுவதும் உள்ள செங்கொடி இயக்கத்திற்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது என்றார் அகில இந்திய விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் முனைவர் விஜூ கிருஷ்ணன்.

தமிழ்நாடு அரசின் டாக்டர் அம்பேத்கர் விருது பெற்றமைக்காக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகத்திற்கு பாராட்டுவிழா புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-

தமிழ்நாடு அரசின் டாக்டர் அம்பேத்கர் விருதை தோழர் பெ.சண் முகம் பெற்றிருப்பது தொடர்ச்சியான அவரது போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். மலைவாழ் மக்க ளுக்கான போராட்டத்தை அங்கீகரித்து விருது வழங்கியமைக்காக தமிழ்நாடு அரசுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அகில இந்திய விவசாயி கள் சங்கத்தின் 1 கோடியே 54 லட்சம் உறுப்பினர்களின் சார்பில் விருது பெற்ற பெ.சண்முகத்தையும், தமிழ்நாடு அரசையும் பாராட்டக் கடமைப்பட்டி ருக்கிறேன்.

1992-ஆம் ஆண்டு முதல் வாச்சாத்தி தொடர்பான போராட்டச் செய்திகளை யும், தோழர் பெ.சண்முகத்தின் பங்கி னையும் அறிவேன். 1999 முதல் விவசாயி கள் இயக்கத்தில் அவரோடு நான் பணியாற்றி வருகிறேன்.  வாச்சாத்தி போல நாட்டில் எத்த னையோ சம்பவங்கள் நடந்துள்ளன.  நடந்து கொண்டு இருக்கின்றன. அத்தனை வழக்குகளிலும் குற்றவாளி கள் தண்டிக்கப்படுவதில்லை. ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு வழக்கில், ‘மேல்சாதி ஆண்கள் கீழ்சாதி பெண்களைத் தொடமாட்டார்கள்’ என்று கூறி நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்த சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளது.

ஆனால், தொடர்ச்சியாக 32 ஆண்டுகள் இடை விடாமல் மக்கள் மன்றம், சட்டமன்றம், நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றங் களில் போராட்டம் நடத்தி, குற்றம்சாட்டப் பட்ட 269 பேரும் குற்றவாளிகள் என்று  தீர்ப்பைப் பெற்றதோடு, தண்டனையை யும் பெற்றுத்தந்தது உலகத்திலேயே நடந்திராத ஒன்று.

வாச்சாத்தி சம்பவத்தில் மலை வாழ் மக்கள் சங்கம், விவசாயிகள் சங்கம், மாதர் சங்கம், தொழிற்சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறோம். இந்தப் போராட்டத்தில் வாச்சாத்திப் பெண்களின் பங்கு முக்கியமானது. இதில் படைத்தளபதியாய் இருந்தவர் பெ.சண்முகம். வாச்சாத்தி நாடுமுழு வதும் உள்ள செங்கொடி இயக்கத்திற்கு உத்வேகம் அளிக்கும் போராட்டம் ஆகும்.

மாணவப் பருவத்தில் இருந்தே...
தோழர் பெ.சண்முகம் மாணவப் பருவத்திலிருந்தே மிகச்சிறந்த போராளியாக விளங்கி வருபவர். மூன்று முறை சிறைத்தண்டனையை அனுபவித்தவர். நீதிபதி தினகரன் 200  ஏக்கர் அரசு நிலத்தையும், சிறுதாவூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 54 ஏக்கர் அரசு நிலத்தையும் அபகரிக்க முயன்ற போது போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர். தற்பொழுது நிலம்  ஒரு பிரச்சனை இல்லை ஒரு தரப்பினர் சொல்கின்றனர். ஆனால், பல நேரங்களில் நிலம்தான் சாதாரண மக்க ளுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது.  

தில்லியில் விவசாயிகள் நடத்திய  போராட்டத்தை பஞ்சாப் மாநிலத்துக் கான போராட்டமாக மோடி அரசு சித்த ரித்தது. இதனைத் தொடர்ந்து தமிழ் நாட்டிலிருந்து ஆயிரத்துக்கும் அதி கமான விவசாயிகள் அப்போராட்டத் தில் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து கேரளாவில் இருந்தும், மகா ராஷ்டிராவில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். இந்த போராட்டத்தை அகில இந்தியப் போரா ட்டமாக மாற்றிக் காட்டியதில் பெ.சண் முகத்தின் பங்கும் முக்கியமானது.

கடந்த 10 ஆண்டுகளில் 5 லட்சத்து க்கும் அதிகமான விவசாயிகள், இளை ஞர்கள், மாணவர்கள், பெண்கள் தற் கொலை செய்துகொண்டுள்ளனர். பயிர் காப்பீடுக்காக விவசாயிகளிடம் இருந்து 52 ஆயிரம் கோடி வசூலிக்கப் பட்டுள்ளது. ஆனால், விவசாயி களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.

சமீபத்தில் கேரள முதலமைச்சர் தில்லியில் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து அம்மாநிலத்துக்கு 13,600 கோடி ரூபாயை ஒன்றிய அரசு விடு வித்துள்ளது. போராட்டமே நமக்கான உரிமையை பெற்றுத்தரும். பெ. சண்முகத்தின் வாழ்நாள் போராட்டம் நமக்கான உந்துசக்தியாக விளங்கும். 

தீக்கதிர் நாளிதழின் மேன்மை
வாச்சாத்தி சம்பவத்தை பல ஊட கங்கள் இருட்டடிப்பு செய்தன. அல்லது முக்கியத்துவம் இல்லாத செய்தி களாக வெளியிட்டன. அதேநேரத்தில் தீக்கதிர் நாளிதழ், சம்பவம் நடந்த நாள் முதல் தண்டனையை உறுதிசெய்த நாள்வரை பிரதான செய்தியாக வெளி யிட்டது. அந்த செய்திகளும் இந்த  வழக்கிற்கு வலுசேர்ப்பதாக அமைந் தன. எனவே, தீக்கதிர் நாளிதழுக்கும் இந்த நேரத்தில் பாராட்டை தெரி வித்துக்கொள்கிறேன். 

இவ்வாறு விஜூ கிருஷ்ணன் பேசினார்.

ஏ.கே.எஸ்.விஜயன் பாராட்டு
திமுக விவசாய அணி மாநில செய லாளரும், தமிழ்நாடு அரசின் தில்லி  பிரதிநிதியுமான ஏ.கே.எஸ்.விஜயன் பேசும்போது, “திமுகவில் நான் விவசாய அணியை வெற்றிகரமாக நடத்துவதற்கு பெ.சண்முகமும் ஒரு காரணம். விவசாயிகளின் பிரச்ச னைகளை புரிந்துகொள்வதற்கும், விவ சாய சங்கங்களை ஒருங்கிணைப் பதற்கும் அவரிடமிருந்து கற்றுக்கொள் வதற்கு ஏராளமான விசயங்கள் உள்  ளன. விருதுத் தொகையாக அவருக்குக் கிடைத்த ரூ.5 லட்சத்தை கட்சிக்கும், மலைவாழ் மக்கள் சங்கத்திற்கும் பகிர்ந்தளித்ததை இங்கே குறிப்பிட் டார்கள். அவர் பணத்திற்கு ஆசைப்பட்டிருந்தால், வழக்கை எதிர்த்து வாதாடியவர்களிடமிருந்து பல கோடி ரூபாயைப் பெற்றிருக்க முடியும். கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று பணியாற்றும் தலை வர் பெ.சண்முகம்” என்றார். 

மலைவாழ் மக்களை கவுரவப்படுத்திய தமிழக அரசு
ஏற்புரையாற்றிய விருதாளர் பெ.சண்முகம் பேசுகையில், 32 ஆண்டுகள் ஆதிவாசி மக்களுக்காக பணியாற்றியதற்காகவும், வாச் சாத்தி மக்களுக்கு நீதி பெற்றுத் தந்ததற்காகவும் இந்த விருது வழங்கப் பட்டிருப்பதாக, விருதுக்கான காரண மாக அரசின் குறிப்பு சொல்கிறது. அநேகமாக மலைவாழ் மக்களுக்காக பணியாற்றியதற்காக இதுபோன்ற விருது இப்பொழுதுதான் முதல் முறையாக வழங்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். என்னையோ, எங் களது இயக்கத்தையோ மட்டுமல்ல; மலைவாழ் பழங்குடியின மக்களை யும் தமிழ்நாடு அரசு கவுரவப்படுத்தி இருப்பதாகவே கருதுகிறேன். எந்தவித உணர்வுகளுக்கும் இரையாகாமல் 32 ஆண்டுகள் உண்மையை மட்டுமே நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்தி லும் பேசி எங்களோடு பயணித்த வாச்சாத்தி மக்களின் மன உறுதியை இந்த நேரத்தில் பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறேன் என்றார்.

விழாவிற்கு தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க அகில இந்திய இணைச் செயலாளர் டி.ரவீந்தி ரன், விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலா மணி, எஸ்கேஎம் மாநில ஒருங்கி ணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன், அகில இந்திய விவசாயிகள் மகாசபை மாநில செயலாளர் ஏ.சந்திரமோகன், விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில செயலாளர் கா.பசுமைவளவன், விதொச மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், தமிழ்மாநில விவ சாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் அ.பாஸ்கர், காவிரி டெல்டா பாசன விவ சாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவர் கே.வி.இளங்கீரன், விவசாயிகள் விடுதலை முன்னணி பொருளாளர் பி.செல்வராஜ், சிபிஎம் மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன், பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்க மாநில தலைவர் கே.முகமதலி, மழைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் பி.டில்லிபாபு, பொதுச் செயலாளர் இரா.சரவணன், விவ சாயிகள் சங்க மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் உள்ளிட்டோர் பேசினர்.

முன்னதாக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன் வரவேற்க, மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி நன்றி கூறினார். விழா வில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.