districts

img

மாணவர்கள் இடைநிற்றல் இல்லாத பள்ளிக் கல்வியை அரசு உறுதிப்படுத்த வேண்டும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, ஏப்.2-  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் ஞாயிறன்று குன்னான்டார்கோவில் அருகே சூசைப்புடையான்பட்டி  தொன் போஸ்கோ இளையோர் கிராமத்தில்  நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வீரமுத்து தலைமை  வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் க.ஜெயராம் வரவேற்று பேசினார். முன்னதாக இன்றைய சூழலில் கல்வி,  சுகாதாரம், சுற்றுச்சூழல் எனும் தலைப்பில்  நடைபெற்ற கருத்தரங்க அமர்வில் தமிழ்  நாடு அறிவியல் இயக்க மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி பேசுகையில், “இன்று இருக்கும் பள்ளிக்கல்வி சூழல்கள் மற்றும் சுற்றுச்சூழல்களில் ஏற்படும் அச்சுறுத்தல்கள், கனிம வளங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியங்கள், குறித்தும் அறிவியல இயக்கம் மக்களிடம் இன்னும் செய்ய வேண்டிய அறிவியல் பரப்புப் பணிகள் குறித்துப் பேசினார். கல்வி அனைவருக்கும் சென்று சேரும் வகையில் வசதிகளை மேம்படுத்த நாம் இன்னும் உழைக்க வேண்டும் என்றார்”.  மாநில துணைத்தலைவர் மாணிக்கத் தாய் இன்றைய சுற்றுச்சூழல் அச்சு றுத்தல்கள் குறித்துப் பேசினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் எல். பிரபாகரன் மக்களுக்கு மருத்துவ வசதி கள் தரமாக கிடைக்க வேண்டியதன் அவசி யம் குறித்துப் பேசுகையில், “கல்வி உரி மைச் சட்டம் போல மருத்துவ உரிமை  சட்டம்  நிறைவேற்றப்பட வேண்டுமென் றார்”. மாநிலப் பொதுக்குழு உறுப்பி னர் மணவாளன் அறிவியல் மனப்பான்மை யை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசி யம் குறித்துப்  பேசினார். தொடர்ந்து அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் மு.முத்துகுமார் வேலை அறிக்கையையும், மாவட்டப் பொருளாளர் விமலா வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். கூட்டத்தில், “  பொதுத்தேர்வுக்கு வராத  50,000 மாணவர்களின் எதிர்காலத்தை அரசு கருத்தில் கொண்டு மாணவர்கள் இடைநிற்றல் இல்லாத பள்ளிக் கல்வியை அரசு உறுதிப்படுத்த வேண்டும் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை அரசு விரைவாக  செயல்படுத்த வேண்டும்.  

இந்தத் திட்டத்தில் கந்தர்வகோட்டை,  கறம்பக்குடி ஒன்றி யங்களையும் இணைத்து குடிநீர்,  நீராதாரம் வசதியை அரசு உறுதி செய்ய வேண்டும்.  கீரனூர்,  நமுணசமுத்திரம், திரு வப்பூர் உள்ளிட்ட இடங்களில் ரயில்வே  மேம்பாலங்கள் அமைக்க வேண்டும். தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்க ளில் பெண்களை தரக்குறைவாக விளம்ப ரப்படுத்தும் முறையை அரசு தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக மாநில செயலாளர் பால கிருஷ்ணன் பொதுமக்களோடு இணைந்து  செய்ய வேண்டிய மக்கள் பணிகள்  குறித்துப் பேசினார். குன்னாண்டார் கோவில் வட்டார செயலாளர் ராஜா  நன்றி கூறினார். புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் சதாசிவம், கமலம், துரையரசன், பவ ணம்மாள் உள்ளிட்ட அனைத்து ஒன்றி யங்களில் இருந்தும் அறிவியல் இயக்க பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.