districts

img

தேசிய கல்விக்கொள்கையின் பாதக அம்சங்கள் தமிழக கல்விக்கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்திவிடக் கூடாது! கருத்துக் கேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, செப்.26 - தமிழ்நாடு அறிவியல் இயக்கம்  சார்பில் தமிழக கல்விக் கொள்கை யில் இடம்பெற வேண்டிய அம்சங்கள்  குறித்து கிழக்கு மண்டல அளவி லான கருத்துக் கேட்புக் கூட்டம் ஞாயிற் றுக்கிழமை புதுக்கோட்டையில் நடை பெற்றது. புதுக்கோட்டை அறிவியல் இயக்க  அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத் திற்கு மாநிலப் பொருளாளர் ஆர்.ஜீவா னந்தம் தலைமை வகித்தார். மாநில  செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் கல்விக் கொள்கைக்கான வரைவ றிக்கை எப்படி இருக்க வேண்டும் என்று  அறிமுகவுரையாற்றினார். புதுக் கோட்டை, திருச்சி, திருவாரூர், பெரம் பலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 30 பிரதிநிதிகள் பங்கேற்றனர். மாநிலச் செயற்குழு உறுப்பி னர் எல்.பிரபாகரன் வாழ்த்துரையாற்றி னார். முதுநிலை செயலரும், கிழக்கு மண்டலப் பொறுப்பாளருமான எம். எஸ்.ஸ்டீபன்நாதன் நிறைவுரையாற்றி னார். கூட்டத்தில் கீழ்க்கண்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டன. தமிழகத்திற்கான கல்விக் கொள்கையை வகுப்பதற்கான அறி விப்பை அறிவியல் இயக்கம் வரவேற் கிறது. அதே நேரத்தில் கல்விக் குழு  அவசர அவசரமாக கருத்துக் கேட்ப தையும், தமிழகக் கல்விக்கொள்கை குறித்து எந்தவொரு முன்வரைவு அறிக் கையும் இன்றி கருத்துக் கேட்பதும் முறையானது அல்ல என்பதையும் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். தமிழக கல்விக்கொள்கை மாநில அரசுகளின் சுயசார்பை பாதுகாக்கும் வகையில் நீடித்த நிலைத்த தொலை நோக்குப் பார்வையுடன் உருவாக்கப் பட வேண்டும். தேசிய கல்விக்கொள் கையின் பாதகமான அம்சங்கள் எந்த  வகையிலும் தமிழகக் கல்விக்கொள்கை யில் தாக்கத்தை ஏற்படுத்திவிடாமல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.  தமிழக கல்விக்கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான கருத்துக்  கேட்பு கூட்டத்தை 40 மாவட்டங்களிலும் நடத்தி, மண்டல, மாநில அளவில் தொகுத்து, தமிழக அரசுக்கு கோரிக் கையாக வழங்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.