districts

img

தட்கல் திட்டத்தில் பணம் செலுத்திய விவசாயிகளுக்கு உடனே மின் இணைப்பு வழங்குக! சிபிஎம் ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி, மார்ச் 11 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் சுப்பிரமணிய புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தட்கல் திட்டத்தில் ரூ.3 லட்சம் செலுத்தி ஒன்றரை ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் முன்னு ரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக மின் இணைப்பு பெற்று பயன்படுத்திய மின் இணைப்பை, அருகில் உள்ள விரோதம் பாவிக்கும் நபர்களிடம் தடை மனு பெற்று மின் துண்டிப்பு செய்வதை  கைவிட வேண்டும்.  வீடுகளுக்கு மின் இணைப்புக் கேட்டு விண்ணப்பித்து பணம் செலுத்தி  காத்திருக்கும் பயனாளிகளுக்கு காலம்  தாழ்த்தாமல் மின் இணைப்பு வழங்க வேண்டும். சுப்பிரமணியபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியி யல், கணினி ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர்களின் நலன் கருதி ஆசிரி யர்களை நியமிக்க வேண்டும். சுப்பிர மணியபுரத்தில் சீர்மரபினர் விடுதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி சுப்பிரமணிய புரம் அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  சிபிஎம் தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழ.சோமு, விவசாயி ஏ.முரு கன், வி.தொ.ச இராசு, கிளைச் செய லாளர் செல்லமுத்து, மாதர் சங்கம் எஸ். சரோஜா, நகர செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, மார்க்சி ஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.கவி வர்மன், மாவட்ட குழு உறுப்பினர் தங்க ராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினர். ஆவுடை யார்கோவில் சிபிஎம் ஒன்றிய செயலா ளர் நெருப்பு முருகேஷ், கவிஞர் கவி பாலா, தர்மராஜ், அத்தாணி சீனிவாசன்  மற்றும் மாதர் சங்கத்தினர் பங்கேற்றனர்.