அறந்தாங்கி, ஜூலை 7- புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத் திற்குட்பட்ட மூன்று நடு நிலைப் பள்ளிகளில் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் முனைவர் ராஜா ராமன் பரிசு வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில், மணமேல் குடி வட்டார கல்வி அலுவ லர் அன்பழகன், அறந்தாங்கி கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் இளையராஜா, வட்டார வளமைய ஒருங்கி ணைப்பாளர் சிவயோகம் ஆகியோர் மாணவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில், அனைத்து தலைமை ஆசிரி யர்கள், ஆசிரியர் பயிற்று நர்கள், சிறப்பாசிரியர்கள், கணக்காளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.