districts

தமிழக மீனவர்கள் 4 பேரை சிறைப் பிடித்தது இலங்கை!

புதுக்கோட்டை, ஜூன் 18-  புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் செவ்வாயன்று (ஜூன் 18) கைது செய்துள்ளனர்

. கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 241 விசைப்படகுகளில் திங்கட் கிழமை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அதில், கோட்டைப் பட்டினத்தைச் சேர்ந்த சிபிராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த பார்த்திபன் (32), முரளி (42),  சாரதி (28) மற்றும் ராமதாஸ் (52) ஆகியோர் நெடுந்தீவு பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மீன்பிடித்துள்ளனர்.

அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி மீன வர்கள் பார்த்திபன், முரளி, சாரதி,  ராமதாஸ் ஆகியோரை கைது செய்த துடன் அவர்களது படகு, வலைகளை யும் பறிமுதல் செய்தனர்.  பின்னர், இலங்கையில் உள்ள  காங்கேசன் துறை கடற்படை தளத்துக்கு அவர்களை  அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த 6 மாதங்களில் மட்டும் எல்லை தாண்டி இலங்கை எல்லைக்குள் வந்து மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 24 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 182 மீன வர்கள் கைதுசெய்யப்பட்டு சட்ட நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இல ங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இரண்டு மாதம் மீன்பிடி தடை காலம் முடிந்து, ஜூன் 15 அன்று தான் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.  இந்த நிலையில் 4 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்துள் ளதால், மீனவர்கள் விரக்தி அடைந் துள்ளனர்.

;