புதுக்கோட்டை, பிப்.5 - புதுக்கோட்டை மாவட் டம் திருமயம் அருகே சாகு படி செய்து வந்த விவசா யிக்கு தெரியமால் நிலத்தை வேறு நபருக்கு விற்றவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருமயம் தாலுகாவில் குலமங்கலம், பேரையூர், மல்லாங்குடி, அரசந்தப் பட்டி, கும்பங்குடி, ராராபுரம், மேட்டுப்பட்டி, மேலப்பனை யூர், குழிப்பிரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஒரு சிலரின் பெயரில் ஏராளமான ஹெக்டேர் ஏக்கர் நிலங்கள் உள்ளன. மேற்படி நிலங் களை நில உடமையாளர்கள் விவசாயம் செய்வதில்லை. ஏழை, எளிய விவசாயத் தொழிலாளர்கள் மேற்படி நிலங்களில் வார அடிப்படை யில் காலம் காலமாக சாகுபடி செய்து வருகின்றனர். இப்படி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உழ வடைப் பட்டா வழங்க வேண்டு மென வலியறுத்தி கடந்த காலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மும் பல்வேறு போராட்டங் களை நடத்தியுள்ளது. தோ ழர் உமாநாத் காலத்தில் நடைபெற்ற இனாம் விவசா யிகளுக்கான போராட்டத் தின் போது, மேற்படி சாகுபடி யாளர்களுக்கு உழவடைப் பட்டா வழங்க அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.
அதன்படி வழங்கப்பட்டு வந்த உழ வடைப் பட்டா கடந்த சில வருடங்களாக நிறுத்தப்பட் டுள்ளது. சில விவசாயி களுக்கு சாகுபடிக்கான அடங்கல் மட்டும் வழங்கப் பட்டு வருகிறது. அதன்படி, கோட்டூர் பிர்கா நச்சாந்துப்பட்டியில் 406/19டீ-யில் 0.16.0 ஏர்ஸ் நஞ்சை நிலத்தை ஏகலை வன் மனைவி காந்திமதி சாகு படி செய்து வந்தார். இந்நி லத்தின் சாகுபடிக்கான அடங்கல் காந்திமதி பெயரி லேயே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்படி நிலம் காந்திமதிக்கு தெரியாமல் மோசடியாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. காலங் காலமாக விவ சாயம் செய்பவர்களை வஞ்சித்து, அவர்கள் சாகு படி செய்த நிலத்தை விற்கும் நடவடிக்கையை கண்டித் தும், இதற்குத் துணைபோ கும் அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி யும் புதுக்கோட்டை மாவட்டம் நச்சாந்துப்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவ சாயிகள் சங்க ஒன்றியச் செய லாளர் எம்.வீரமணி தலைமை வகித்தார். விவசாயத் தொழி லாளர் சங்க மாநில பொருளா ளர் எஸ்.சங்கர் கண்டன உரை யாற்றினார். கோரிக்கை களை விளக்கி சிபிஎம் மாவட் டக்குழு உறுப்பினர் சி.ஜீவா னந்தம், ஒன்றியச் செயலா ளர் எஸ்.வீரையா, கட்டுமா னத் தொழிலாளர் சங்கத் தலைவர் வெள்ளைச்சாமி, விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் பழனிவேல், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் ஜெ.வைகைராணி உள்ளிட் டோர் பேசினர்.