புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா ரெகுநாதபுரம் கிராமத்தில் உள்ள காரைக்குளம் வரத்துவாரி தூர்வாரும் பணியை திங்கள்கிழமை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை தொடங்கி வைத்தார். உடன் கறம்பக்குடி வட்டாட்சியர் விஸ்வநாதன், நீர்வளத்துறை செயற்பொறியாளர், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் த.அன்பழகன், ஒன்றியச் செயலாளர் பி.வீரமுத்து உள்ளிட்டோர்.