districts

img

புதுக்கோட்டை: 110 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ரூ.110 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மீமிசல் பகுதியில் போதைப் பொருட்கள் இருப்பதாக சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது இறால் பண்ணைக்கு சென்று சோதனை செய்தபோது போதைப் பொருள் இருப்பது உறுதியானது. பண்ணையில் மறைத்து வைத்திருந்த ரூ. 110 கோடி மதிப்பிலான 100 கிலோ ஹாஷிஷ் போதைப் பொருள்களும், 874 கிலோ கஞ்சாவும் மொத்தம் 48 பொட்டலங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து  எஸ்பி பட்டினத்தைச் சேர்ந்த இறால் பண்ணையின் உரிமையாளர் அமீர் சுல்தான் என்பவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். மேலும் இந்த போதைப்பொருட்கள் அனைத்தும் ராமநாதபுரத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.