districts

img

வாசகர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கொண்டாடிய புதுக்கோட்டை புத்தகத் திருவிழா நிறைவு

புதுக்கோட்டை, ஆக. 6- புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வில் ரூ.3 கோடிக்கு புத்தகம் விற்று  சாதனை படைத்துள்ளதாக சட்டத்துறை  அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாக மும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும்  இணைந்து 7ஆவது புத்தகத் திரு விழாவை புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி விளையாட்டுத் திடலில் ஜூலை  27  முதல் ஆக.5 வரை நடத்தியது. 

தமிழ்நாட்டின் பல முன்னணி புத்தக  நிறுவனங்களின் சார்பில் நூற்றுக்கும்  மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டி ருந்தன. தினமும் மாலை நடைபெற்ற சொற்பொழிவில் ஆவணப்பட இயக்கு நர் பாரதி கிருஷ்ணகுமார், ஆர்.பால கிருஷ்ணன், ராணுவ விஞ்ஞானி டில்லி பாபு, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், எழுத்தாளர் வெண்ணிலா, கவிஞர் மு. முருகேஷ் மற்றும் அறிவியல் இயக்க நிர்வாகிகள் பேசினர். 

மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் நாடாளு மன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்று சிறப்புரையாற்றினர். 

இந்நிலையில், நிறைவு விழா திங்கள்கிழமை மாலை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்று மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசுகையில், “10 நாள் புத்தகத் திருவிழாவில் மொத்தம் 2.25 லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்றனர். மொத்தம் ரூ.3 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாயின. 5,500 மாணவ, மாணவிகள் கோளரங்கத்தை பார்வை யிட்டுள்ளனர். 

மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் புதுக்கோட்டையில் 10 நாட்கள் தசரா  விழா கோலாகலமாக நடந்தது. இப்போது, புத்தகத் திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடந்திருக்கிறது. சிறு குழந்தைகளையும் வாசிக்க வைக்க எடுத்துக் கொண்ட முயற்சி  பாராட்டத்தக்கது. ஒருங்கிணைப்பா ளர்களின் ஓய்வறியா பணி பாராட்டுதற் குரியது” என்றார்.