districts

img

புதுக்கோட்டை: சிறந்த விடுதிக் காப்பாளர்களுக்கு விருது

புதுக்கோட்டை டிச.12-  பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலவிடுதிகளில் சிறந்த விடுதிகளாக தேர்வு செய்யப்பட்ட காப்பாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலை மையில் திங்களன்று நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பொதுமக்களின் 469 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். இம்  மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி நட வடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டார்.  பின்னர் மாவட்ட ஆட்சியரகத்தில், பிற்படுத்தப் பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலவிடுதிகளில் 2021-2022 ஆம் ஆண்டில் மாவட்ட அள வில் சிறந்த விடுதிகளாக தேர்வு செய்யப்பட்ட 3 விடுதி  காப்பாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பாராட்டுச் சான்றிதழ், பரிசுத் தொகை மற்றும் கேட யங்களை வழங்கினார்.