districts

img

கந்தர்வகோட்டையில் மக்கள் தொடர்பு முகாம்: எம்.சின்னதுரை எம்எல்ஏ தொடக்கி வைத்தார்

புதுக்கோட்டை, ஜூலை 16 - புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை யில் முதல்வரின் மக்கள் தொடர்பு முகாமை கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம். சின்னதுரை செவ்வாயன்று தொடங்கி வைத்தார்.

பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பொதுமக்களின் பிரச்சனையைத் தீர்ப்ப தற்காக இந்த முகாம் நடத்தப்பட்டது. முகாமில் பல்வேறு துறை அதிகாரி கள் பங்கேற்றனர்.

ஆயிரத்துக்கும் அதிக மானோர் பங்கேற்ற இந்த  முகாமில் கல்வி உதவித் தொகை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டது. இலவச வீட்டு மனைப் பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 

கந்தர்வகோட்டை தொ குதி சட்டப்பேரவை உறுப்பி னர் எம்.சின்னதுரையுடன் மாவட்ட ஆதிதிராவிடர் நல  அலுவலர் ஸ்ரீதர், கந்தர்வ கோட்டை ஒன்றியக் குழு  தலைவர் கார்த்திக் என்ற  ரெத்தினவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.