districts

img

ஆசிரியர்களுக்கு ‘பெருமை’ விருது வழங்கல்

பொன்னமராவதி, செப்.8 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஆதிகாலத்து அலங்கார மாளிகை நிறுவனத்தின் சார்பில் ஆசிரியர் தினத்தையொட்டி ஆசிரியர்களுக்கு ‘பெருமை விருதுகள்’ வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு நிர்வாக இயக்குநர் அ.ப.ஜெயபால் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் இ.அருள்மணி நாகராஜன், நிர்வாக இயக்குநர் அ.ப.மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பங்கேற்று, ஆசிரியர்களுக்கு பெருமை விருதுகள் வழங்கினார். தொடர்ந்து தேசிய நல்லாசிரியர் விருதாளர் கவிஞர் தங்கம்மூர்த்தி, ஐடியா பிளஸ் தலைவர் கிருஷ்ண வரதராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பொன்னமராவதி மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சார்ந்த சீரிய பணி, சமூக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பெருமை விருது வழங்கப்பட்டது.

;