districts

தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு உறவினர்கள் சாலை மறியல்

அறந்தாங்கி, டிச.19- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குளம் பகுதியை சேர்ந்தவர்  ஜோதிமீனா (26). இவர் கடந்த டிச.13 அன்று அறந்தாங்கி அரசு மகப்பேறு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம்  பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால்  சிறிது நேரத்தில் ஜோதிமீனா உயிரிழந்துள் ளார்.  அதேபோன்று கூத்தாடிவயல் பகுதி யைச் சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு சுகப்பிர சவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் ராஜலட்சுமிக்கு உதிரப்போக்கு அதிகரித்ததால், பணியில் இருந்த மருத்து வர்கள் ரத்தப் போக்கை நிறுத்துவதற்காக கர்ப்பப்பையை நீக்கியுள்ளனர். பின்னர்  ராஜலட்சுமியை மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு  அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது.  இந்நிலையில் தவறான சிகிச்சை அளித்  ததால் தான் ராஜலட்சுமி மற்றும் ஜோதி மீனா விற்கு இந்த நிலை ஏற்பட்டது என்றும், பிர சவத்திற்கு அனுமதிக்கப்படும் பெண்களை செவிலியர்கள் ஒருமையில் பேசுவதாக வும் கூறி சம்பந்தப்பட்ட உறவினர்கள் மருத்  துவமனை வளாகம் முன்பு அறந்தாங்கி -பட்டுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவம் மற்றும் ஊரக  நலப்பணிகள் இனை இயக்குநர் ராமு,  அறந்தாங்கி வட்டாட்சியர் பாலகிருஷ் ணன் ஆகியோர் போராட்டம் நடத்திய வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சிகிச்சை பெற்று வரும் ராஜலட்சுமிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும். சம்பந்தப் பட்ட மருத்துவர், செவிலியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். பின்னர் போராட்டம் கை விடப்பட்டது.