districts

ஏப்.24 புதுக்கோட்டையில் ஓவியப் பயிற்சி முகாம்

புதுக்கோட்டை, ஏப்.21- தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகம் முழுவதும் செயல்படும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் வாயிலாக உலக ஓவிய தினத்தன்று, ஓவியப்பயிற்சி பட்டறையும் அதனை தொ டர்ந்து சென்னையில் மாநில  அளவிலான கலைக் காட்சி யும் நடைபெறவுள்ளது. ஓவியப் பயிற்சி முகாம் களில் மரபுசார்ந்த ஓவியங் கள், துணி ஓவியங்கள், கண்ணாடி ஓவியங்கள், பேப்பர் ஓவியங்கள், பானை,  மரம் ஓவியங்கள், வாட்டர் கலர் ஓவியங்கள், பென்சில் ஓவியங்கள் உள்ளிட்ட ஓவி யங்கள் இடம்பெறும் வகை யில் நடத்தப்பட உள்ளது. இம்முகாம் புதுக்கோட்டை அரசினர் ஆரம்ப துவக்கப் பள்ளி, வடக்கு ராஜவீதி, டவுன்ஹால் அருகில் ஏப்ரல் 24 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10 மணி முதல்  மாலை 5 மணி வரை நடை பெறும். பிற்பகல் 3 மணிக்கு  மாணவர்கள் வரைந்த ஓவி யங்கள் காட்சிப்படுத்தப் பட்டு அவற்றில் தேர்வு செய் யப்பட்ட சிறந்த ஓவியங்கள்  மாநில அளவில் சென்னை யில் நடைபெறவுள்ள நிறைவு விழாவில் காட்சிக்கு வைக் கப்படும். கலந்து கொள்ளும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி பொருட்கள், பயிற்சி சான்றிதழ் மற்றும் மதிய உணவு வழங்கப்படும். இவ்வாய்ப்பினை புதுக் கோட்டை மாவட்டத்தில் உள்ள கலையார்வமிக்க மாணவ, மாணவியர்கள் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள் ளார்.