districts

ஆன்லைன் சூதாட்டம் நடத்துவோரை ஒன்றிய அரசு பாதுகாக்க கூடாது!

புதுக்கோட்டை, ஜன.3 - ஆன்லைன் சூதாட்டம் நடத்துவோரை பாதுகாக் கும் வகையில் ஒன்றிய அரசு  செயல்படக் கூடாது என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரி வித்துள்ளார். புதுக்கோட்டை ராணி யார் அரசு மகளிர் மேல்நிலைப்  பள்ளியில் திமுக இளைஞ ரணி சார்பில் நோட்டு புத்த கங்கள், எழுதுகோல் வழங்  கும் நிகழ்ச்சி செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.  இதில் பங்கேற்ற சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகு பதி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ள சட்டம் ஆன்லைன் சூதாட்டங்களை நடத்துகின்றவர்களை பாது காக்கிற சட்டமாகவோ, அவர்களிடமிருந்து வரி  வசூல் செய்கிற சட்டமா கவோ இருக்கக் கூடாது என் பதுதான் தமிழக அரசின் நோக்கம். ஆன்லைன் ரம்மி யை முழுமையாகத் தடை  செய்ய வேண்டும் என்பதை  ஒன்றிய அரசிடம் நாங்கள்  தொடர்ந்து வலியுறுத்து வோம்.  தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டம் அனைவ ருக்கும் பொதுவானது. அனைவரும் ஏற்றுக் கொள்  ளக்கூடியது. அதை அடிப்ப டையாகக் கொண்டு, ஒன் றிய அரசு அந்த சட்டத்தை கொண்டு வந்தால் வர வேற்கத்தக்கதாக இருக் கும். அதை விடுத்து ஆன்  லைன் சூதாட்டம் நடத்து பவர்களை பாதுகாக்கிற வகையில் இருந்தால், அது  கண்டிக்கத்தக்கது” என்றார்.