districts

கலைஞர் பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கல்

அறந்தாங்கி, ஜூன் 4 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் மறைந்த டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 99 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை பிறந்த  11 குழந்தைகளுக்கு நகர்மன்ற துணை தலைவர் தி.முத்து, ஏற்பாட்டில் சட்டதுறை அமைச்சர் எஸ்.ரகுபதி தங்க மோதிரம் அணிவித்து, பரிசுப் பெட்டகம் வழங்கினார். அவருடன் மாவட்ட அவைத்தலைவர் பொன்துரை, அறந்தாங்கி நகராட்சி தலை வர் இரா.ஆனந்த் மற்றும் அறந்தாங்கி நகர்மன்ற உறுப்பினர்கள், மணமேல்குடி ஒன்றிய செயலாளர் சக்தி ராமசாமி, மண மேல்குடி ஒன்றிய துணை பெருந்தலைவர் சீனியர் ஆர்.ஆர்.கே. கலைமணி, அறந்தாங்கி தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை
கலைஞரின் பிறந்தநாள் விழா மயி லாடுதுறை மாவட்டத்தில் கொண்டாடப்பட் டது. பொறையார் அருகிலுள்ள திருக்களாச் சேரி ஊராட்சி ஆயப்பாடியில் ஊராட்சி மன்ற  தலைவர் சம்சாத் ரபீக் தலைமையில் நடந்த விழாவில் 500-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, தென்னங்கன்று, மரக்கன்றுகள், பழங்களை சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் வழங்கி சிறப்புரையாற்றினார்.