புதுக்கோட்டை, அக்.22 - கந்தர்வகோட்டை அருகே இடி, மின்னல் தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு பேரிடர் கால நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சம் அரசு சார்பில் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை தாலுகாவில் சங்கம்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட மணப்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள ஜெகன்நாதன் மனைவி கோகிலா(40) வியாழக்கிழமை மாலை பசுமாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது இடி மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே கோகிலா பலியா னார். அவர் மேய்த்துக் கொண்டிருந்த மாடும் பலியானது. தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்ன துரை, போலீசாரை வரவழைத்ததோடு, கோகிலாவின் சடலத்தை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்று உடற்கூராய் வுக்கு ஏற்பாடு செய்தார். மேலும், பாதிக் கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத் தார். இந்நிலையில், முதலமைச்சரின் பேரிடர் கால நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சம், உயிரிழந்த கோகிலாவின் குடும்பத்திற்கு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேற்படி நிதியை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்ல பாண்டியன் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வில் புதுக்கோட்டை கோட் டாட்சியர் முருகேசன், கந்தர்வ கோட்டை வட்டாட்சியர் ராஜேஸ்வரி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் பரமசிவம், பெருமாள், துணைத் தலைவர் சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.