பொன்னமராவதி, மார்ச் 15- புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதி அருகே உள்ளது நல்லூர் கிராமம். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நல் லூர், கீரங்குடி, ஆத்தங் காடு,மேமனப்பட்டி நெருஞ்சிக்குடி, அரசமலை, வாழைக்குறிச்சி, சாத்த னூர், வையாபுரி ஆகிய கிரா மங்களைச் சேர்ந்த 426 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். போதிய வகுப் பறைக் கட்டடம் இல்லாத தால் மரத்தடி நிழலிலும், சைக்கிள் நிறுத்துமிடத்திலும் அமர்ந்து மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி தரம் உயர்த்தப்பட்ட பின் பள் ளிக்கு தேவையான எந்த வசதிகளும் செய்து தரப்பட வில்லை எனக் குற்றச்சாட்டு உள்ளது. பிளஸ்-2 மாணவர் களுக்கு ஆய்வகமும் இல்லை. சுற்றுச்சவர் இல்லாததால் கால்நடைகள் பள்ளி வளா கத்திற்குள் சுற்றித் திரிகின் றன. மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகம் சுற்றுச்சுவர் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.