districts

img

கந்தர்வகோட்டை ஊராட்சி அலுவலகத்தை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்

புதுக்கோட்டை, நவ.30-  புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஊராட்சிமன்ற அலுவலக புதிய கட்டடத்தினை சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை முன்னிலையில் சட்டத்  துறை அமைச்சர் எஸ்.ரகுபதி செவ்வாயன்று திறந்து வைத்தார்.  நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், ‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கந்தர்வக்கோட்டை ஊராட்சிமன்ற அலுவலக கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.  கிராம வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற அடிப்படை யில் கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. பொதுமக்கள் அரசின் திட்டங்களை முழுமை யாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டி யன், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், ஒன்றி யக்குழுத் தலைவர் கார்த்திக் (எ) இரா.ரெத்தினவேல், ஊராட்சிமன்றத் தலைவர் தமிழ்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.