புதுக்கோட்டை, ஜூன் 12- தமிழகத்தில் எந்த சக்தியாலும் கலவரத்தை உருவாக்க முடியாது என்றார் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டையில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டியில், “காவிரி- குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்கு நிலமெடுப்புப் பணி கள் நடைபெற்று வருகின்றன. பல கிராமங்களில் பிரச்சனைகள் வருவ தால் மக்களின் சம்மதத்துடன், நில மெடுக்கும் பணிகள் படிப்படியாக நடை பெற்று வருகின்றன. அதனால்தான் காலதாமதம் ஆகிறது.
கடந்த ஆட்சியில் நீர்நிலைகள் தூர் வாரும் பணிகள் எப்படி நடைபெற்றன என்பது அந்தந்தப் பகுதி மக்களுக்கு தெரியும். மழை ஆரம்பிக்கும் போது தூர்வாரத் தொடங்குவார்கள், பிறகு மழை வந்ததால், நிறுத்திவிட்டதாகக் கூறினார்கள். நாங்கள் அவ்வாறு செய்ய மாட்டோம்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற் காக காடுகளை வளர்ப்பதற்கு முக்கி யத்துவம் கொடுத்து பணியாற்றி வரு கிறோம். நெடுஞ்சாலைத் துறையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வரு கிறது. தொடர் முயற்சிகளால் வனப் பரப்பு அதிகரித்திருக்கிறது.
தைல மரங்களை புதிதாக வைக்கக் கூடாது என உயர்நீதிமன்ற உத்தரவு இருக்கிறது. தைலமரம் ஒரு முறை வைக்கப்பட்டால் அது, ஏறத்தாழ 21 ஆண்டுகள் இருக்கும். 3 முறை வெட்டு வார்கள். 4 ஆவது வெட்டுக்கு போகாத அளவுக்கு பார்த்துக் கொள்வோம்.
ஆவுடையார்கோவில் பகுதியில் சூரியஒளி மின்சாரம் தயாரிக்கும் பணிகளுக்காக விவசாயிகள் நிலம் எது வும் அபகரிக்கப்படவில்லை. அவ்வாறு இருந்தால் புகார் தெரிவிக்கப்பட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.
கலவரம் ஏற்படுத்தினால்தான் பாஜக வளர முடியும் என இந்து மக்கள் கட்சியின் நிர்வாகி பேசிய ஆடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருவது குறித்து கேட்கிறீர்கள். தமிழ்நாட்டில் எந்த சக்தியும் கலவரத்தைத் தூண்டு வதற்கு அனுமதிக்க மாட்டோம். அவ்வாறு ஏதாவது நடந்தால், உடனடியாகத் தடுத்து நிறுத்துவோம்” என்றார்.