அறந்தாங்கி, மார்ச் 6- புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி நகராட்சி யின் சார்பில் அறந்தாங்கி கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளை சார்பில் பரா மரிக்கப்பட்டு வரும் ஜீவனா லயம் எரிவாயு தகன மேடை யில், தியான அரங்கம் அமைக் கப்பட்டு மக்கள் பயன்பாட் டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. நிகழ்விற்கு கராத்தே பிர தர்ஸ் சமூக நல அறக்கட் டளை தலைவர் வி.சுப்பிர மணியன் தலைமை வகித் தார். செயலாளர் எம்.ஜி. ராஜா, துணைச்செயலாளர் சி.காசிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் நலத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தியான அரங் கத்தை திறந்து வைத்து, தியான அரங்க வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அறந்தாங்கி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.டி. இராமச்சந்திரன், நகர் மன்றத் தலைவர் இரா.ஆனந்த், நகர்மன்றத் துணைத்தலைவர் தி.சுப்பிர மணியன், நகராட்சி ஆணை யர் லீமா சைமன், வருவாய்க் கோட்டாட்சியர் சொர்ணராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.