புதுக்கோட்டை, ஜூலை 15 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை யில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சாதி ஆணவப் படுகொலையை தடுத்திட தனிச்சட்டம் இயற்றவும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்திடவும் வலியுறுத்தி நடை பெற்ற கருத்தரங்கிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி தலைமை வகித்தார். சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் பி.சுகந்தி, மாநிலத் தலை வர் எஸ்.வாலண்டிணா ஆகியோர் சிறப்புரை யாற்றினர். மாவட்டச் செயலளார் பி.சுசிலா மற்றும் நிர்வாகிகள் பேசினர்.