புதுக்கோட்டை, டிச.7 - புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வெண்ணாவல்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முறைகேட்டைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டிச.10 அன்று முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கட்சியின் திருவரங்குளம் மேற்கு ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெண்ணா வல்குடி தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய விவசாயக் கடன், நகைக்கடன், சிறுதொழில் கடன், கால்நடைக் கடன் ஆகிய வற்றில் கையாடல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர் களிடம் கேட்ட போது அப்படியெல்லாம் நடக்கவில்லை என முதலில் மழுப்பினர். சில ஆதாரங்களை காட்டியபோது அது சங்கத்தில் உள்ள தற்காலிக ஊழியர்கள் செய்த முறைகேடு. அவர்கள் கையாடல் செய்த தொகையை கட்டச் சொல்விட்டோம் என்றார்கள். நிரந்தரப் பணியாளர்களுக்குத் தெரியாமல் எப்படி தவறு நடந்திருக்க முடி யும் எனக் கேட்ட போது, தற்காலிக பணியா ளர்கள் மீது நடவடிக்கை எடுத்துவிட்டோம் என்கிறார்கள்.
ஒரு கூட்டுறவு கடன் சங்கத்தில் செய லாளர் உள்ளிட்ட அலுவலர்களுக்குத் தெரியாமல் எப்படி விவசாயிகளுக்குச் சேர வேண்டிய பணத்தை கையாடல் செய்ய முடியும். இவர்கள் சரிபார்க்காமல் எப்படி கோப்புகளில் கையெழுத்துப் போட்டார்கள். இதே, சங்கத்தில் கடந்த காலங்களில் நடை பெற்ற முறைகேடுகளில் செயலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் மீது பணிநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது தற்காலிகப் பணியா ளர்களைப் பகடைக்காயாய்ப் பயன்படுத்தி நிரந்தரப் பணியாளர்கள் தப்பிக்கும் முயற்சி யில் ஈடுபட்டுள்ளனர். எனவே, சம்பந்தப் பட்ட துறை உயர் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து உண்மைக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி டிச.10 அன்று வெண்ணாவல்குடி கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்த உள்ளதாக” கூறப்பட்டுள்ளது.