districts

img

‘புத்தகங்களுடன் புத்தாண்டை கொண்டாடுவோம்’ வாலிபர் சங்கத்தினர் புத்தக விற்பனை

அறந்தாங்கி, டிச.31-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட குழு சார்பில் பாரதி புத்தகாலயத்தி னர் ‘‘புத்தகங்களுடன் 2023 புத்தாண்டை கொண்டாடுவோம்’’ என்ற தலைப்பில் புத்தக  விற்பனை செய்தனர்.  வாலிபர் சங்கம் மாவட்ட தலைவர் மகாதீர், மாவட்டச் செயலாளர் குமரவேல்  தலைமையிலான இரண்டு நாள் புத்தக  விற்பனையை  சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் துவக்கிவைத்தார்.  வழக்கறிஞர் சங்க மாவட்டச் செயலாளர் அலாவுதீன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைத்தலைவர் கவிபாலா ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். வாலிபர் சங்க நிர்வாகிகள் மற்றும் மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் இந்துராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.