புதுக்கோட்டை, ஜூன்.19- புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் வட்ட சட்டப் பணிகள் குழுவின் வாகன விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பேரணியை சார்பு நீதிபதி ராஜேஷ் தலைமையில் தீதித்துறை நடுவர் முருகானந்தி மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதி அன்புதாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த வாகன விழிப்புணர்வு பேரணி இலவச சட்ட உதவி மையத்தின் பயன்பாடுகள், சமரச தீர்வு மையம், சிறப்பு மக்கள் நீதிமன்றம், இந்தியாவில் கடைக்கோடி மனிதனுக்கும் இலவச சட்ட உதவி மையத்தின் பயன்பாடுகள் சென்றடைய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு நடைபெற்றது.