districts

img

திரை இயக்க செயல்பாட்டாளர் எஸ்.இளங்கோவுக்கு பாராட்டு

புதுக்கோட்டை, அக்.20-  35 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து உலகத் திரைப்படங்களை மக்களிடையே கொண்டுசெல்லும் முக்கியமான பணியில் ஈடுபட்டு வரும் எஸ்.இளங்கோ புதுக்கோட்டையில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவில் கவுரவிக்கப்பட்டார். 1986-ஆம் ஆண்டு துவக்கப்பட்ட புதுகை பிலிம் சொஸைட்டியின் நிறுவனர் செயலாளராகப் பொறுப் பேற்றவர் எஸ்.இளங்கோ. அவ்வாண்டு  துவங்கி 1995 வரை பிலிம் ரோல்களின் காலத்தில் 16 எம்எம், 35 எம்எம் உலகத் திரைப்படங்களைத் திரையிட்டு தற்போது டிஜிட்டல் வடிவத்திலும் மாற்று சினிமாவுக்கான இயக்கத்தை தொடர்ந்து புதுக்கோட்டையில் நடத்தி வருகிறார். 1940 மற்றும் 1950-களில் வங்கா ளத்தில் சத்யஜித் ரே போன்றவர் கள் உலகத்தரமான திரைப்படங்க ளை உருவாக்கித் தந்தனர். மேலும்  வங்காளத்தில் ரித்விக் கட்டக், மிரு ணாள்சென் இந்தியில் கோவிந்த் நிஹ்லானி, மலையாளத்தில் அர விந்தன், அடூர் கோபாலகிருஷ்ணன், கன்னடத்தில் கிரீஷ் கர்னாட், தமிழில் ருத்ரய்யா, ஜெயகாந்தன் போன்றவர் கள் மாற்று சினிமாவை உரு வாக்கியவர்கள். இதுபோன்று உலக அளவில் ஜப்பானின் அகிரா குரோசோவா, ஸ்வீடனின் இங்மர் பெர்க்மேன், இத்தாலியின் விட்டோரியா டி சைகா போன்றவர்களின் திரைப்படங்களை புதுக்கோட்டைக்கு வரவழைத்து இங்குள்ள ரசிகர்களுக்கு அத்திரைப் படங்களை போட்டுக் காட்டியவர்.  90-களில் தமிழ் சினிமாவில் புதிய அலை இயக்குநர்களாக உருவாகி வந்த பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற வர்களின் சினிமாக்களைத் திரையிட்ட தோடு, அவர்களை புதுக்கோட்டைக்கு வரவழைத்து நேர்காணல் நிகழ்ச்சி களையும் நடத்தியவர் எஸ்.இளங்கோ. இந்திய மற்றும் உலக மொழிப் படங்களை வரவழைத்து ஐம்பது க்கும் மேற்பட்ட சிறு திரைப்பட விழாக்களை நடத்தியவர். சினிமா குறித்த கருத்தரங்குகளை ஏற்பாடு செய்ததோடு, உலக சினிமாக்களை அறி முகம் செய்து இதுவரை எட்டு புத்தகங்களை எழுதி வெளியிட்டுள் ்ளார்.  இவ்விழாவில் எஸ்.இளங்கோ எழுதிய, ‘‘என் தம்பி டைனோசர்களை துரத்துகிறான்’’ என்ற உலக சினிமா  கட்டுரை தொகுப்பு நூலும் வெளி யிடப்பட்டது.  நூலை தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் வெளியிட மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கவிசுடர் கவிதைப்பித்தன் பெற்றுக்கொண்டார். பாராட்டு விழாவிற்கு கவிஞர் நா. முத்துநிலவன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தமுஎகச மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.