districts

img

கதர் கிராம தொழில்கள் வாரிய அலுவலகம் மூடல் புதுக்கோட்டையில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜன. 9-  புதுக்கோட்டையில் இயங்கி வந்த கதர் கிராம தொழில்கள் வாரிய உதவி இயக்குநர் அலுவலகம் மூடப்பட்டதை கண்டித்து சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து  50-க்கும் மேற்பட்ட  தொழிலாளிகள் பேரணியா கச் சென்று  திலகர் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சிஐ டியு மாவட்டத் தலைவர் கே. முகமதலிஜின்னா தலைமை வகித்தார். மாநிலச் செயலா ளர் ஏ.ஸ்ரீதர் உரையாற்றினார்.  மாவட்டப் பொருளாளர் எஸ். பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் பேசினர். புதுக்கோட்டை அம்பாள்  புரத்தில் இயங்கி வந்த கதர்  கிராம தொழில்கள் வாரிய  உதவி இயக்குநர்  அலுவல கத்தின் மூலமாக மண்பாண்  டங்கள் தயாரிப்போர், பனை வெல்லம் தயாரிப்போர் உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமியத் தொழி லாளர்கள் பயனடைந்து வந்தனர்.  இந்நிலையில், இந்த அலுவலகம் திருச்சிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு அறிவித்து கடந்த 6-ஆம் தேதி முதல் புதுக்கோட்டை அம்பாள்புரத்தில் இயங்கி வந்த உதவி இயக்குநர் அலு வலகம் மூடப்பட்டது.