districts

கீரமங்கலம் நரிக்குறவர் காலனி குழந்தைகளின் பெற்றோர்களை சந்தித்த கல்வி அதிகாரி

புதுக்கோட்டை, செப்.20 - கீரமங்கலம் அருகே அறி வொளி நகர் குழந்தைகள் பள்ளியிலிருந்து இடை நின்றல் தொடர்பாக வட்டார  கல்வி அலுவலர் செவ்வாய்க் கிழமை ஆய்வு மேற்கொண் டார்.  புதுக்கோட்டை மாவட் டம் கீரமங்கலம் வடக்கு அறி வொளி நகர் நரிக்குறவர் காலனியில் உள்ள ஏராள மான பள்ளி வயது குழந்தை கள் உள்ளனர். இவர்களில் பெரும்பகுதியினர் பள்ளிக்கு செல்வதில்லை. இதற்கு பல்வேறு கார ணங்கள் கூறப்பட்டாலும் போக்குவரத்து அதிகமாக உள்ள சாலையில் எந்த நேரத்திலும் விபத்து ஏற்பட லாம் எனப் பயந்து பள்ளி யிலிருந்து இடையில் நிறுத்திக் கொண்டதாக கூறப் படுகிறது. இந்த தகவலை அறிந்து  கல்வி அதிகாரிகள் அறி வொளி நகருக்கு சென்று ஆய்வு செய்து மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப வலியுறுத்தி வரு கின்றனர். மேலும் மாணவர் களை பள்ளிக்கு அழைத்துச்  செல்ல வாகன ஏற்பாடுகள் செய்வதாக பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் உறுதி அளித்தனர். இத னால் தற்பொழுது 32 மாணவ, மாணவிகள் அரசுப்  பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.

அதிகாரி இரவில் ஆய்வு
இந்நிலையில் திரு வரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரன், அறிவொளி நகர் மாணவ, மாணவிகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு தவறாமல் வருகிறார்களா? என்று பள்ளி களில் ஆய்வு செய்த போது,  ஒரு சில மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்பது  தெரிய வந்தது.  இதனையடுத்து திங்கட் கிழமை இரவு வட்டாரக் கல்வி அலுவலர் கருணா கரன் அறிவொளி நகர் நரிக் குறவர் காலனியில் உள்ள  அனைத்துப் பெற்றோர் களின் வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம், ‘உங்கள் குழந்தைகளை நாள் தவறா மல் பள்ளிக்கு அனுப்பினால் அவர்களும் படித்து நல்ல வேலைகளுக்கு செல்ல முடி யும். சமூகத்தில் மதிப்பு மிக்க வர்களாக வலம் வரலாம்’ என எடுத்துக் கூறினார். இத னைத் தொடர்ந்து பெற்றோர்கள் தவறாமல் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதாக உறுதி அளித்தனர்.  தொடர்ந்து மாணவ,  மாணவிகளை உற்சாகப்படுத் துவதற்காக கிராம நிர்வாக  அலுவலர் ராஜா, நாணய வியல் கழகத் தலைவர்  பஷீர்அலி, அறிவியல் இயக்கம் சார்பில் அறி வொளி எஸ்.ஏ.கருப்பையா ஆகியோர் பல்வேறு போட்டி கள் நடத்தி பரிசுகளையும் வழங்கினர்.

;