அறந்தாங்கி ஜூன் 6 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் பெருங் காடு ஊராட்சியில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி போராட்ட அறிவிப்பு கூட்டம் ஆர் ஆர். மண்ட பத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சாத்தர் தலைமை தாங்கினார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் நாராயணமூர்த்தி, சிபிஜ மாவட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன், சிபிஜ ஒன்றிய செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெருங்காட்டில் இயங்கி வரும் இரண்டு டாஸ்மாக் மதுக் கடைகளையும் அகற்ற வேண்டும். பெருங்காட்டில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கிராம பொதுமக்கள், சுய உதவிக்குழு பெண்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், மற்றும் அனைத்துக்கட்சிகள் சார்பில் ஜூன் 20 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பெருங்காட்டில் சாலை மறியல் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.