புதுக்கோட்டை, மார்ச் 5- புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சா வூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்றது. திருச்சிராப்பள்ளியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பால்பாண்டி, நீலகண்டன், நாகராஜன், குமாரவேல், புதுக்கோட்டையில் ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சே.ஜபருல்லா, இரா.ரெங்கசாமி, த.ஜீவன்ராஜ், வி.எம்.கண்ணன், கரூரில் ப.தமிழ் மணியன், சு.வேலுமணி, பா.பெரியசாமி, வி.ஆரோக்கியா பிரேம்குமார், மு.சுப்பிரமணியன், கெ.சக்திவேல், தஞ்சாவூரில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.ரெங்கசாமி, இ.சத்யசீலன், பி.இளையராஜா, எஸ்.பன்னீர்செல்வம், திருவாரூரில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வே.சோமசுந்தரம், த.வீரமணி, ஆர்.முத்துவேல், ச.சண்முகவடிவேல், ஆர். சத்தியமூர்த்தி, த.மணிமாறன், நாகப் பட்டினத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பா ளர்கள் அ.தி.அன்பழகன்.ப. ரவி வி.இராஜராஜன். சரவணன் ஆகியோர் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.