districts

img

ஆக்கிரமிப்பை அகற்றுவதில் இருப்பவனுக்கு ஒரு நீதி, இல்லாதவனுக்கு ஒரு நீதியா? கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் கேள்வி

புதுக்கோட்டை, மே 31 - ஆக்கிரமிப்பு அகற்றுவதில் இருப்ப வனுக்கு ஒரு நீதி, இல்லாதவனுக்கு ஒரு  நீதியா? எனக் கேள்வி எழுப்பினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் நிதியளிப்பு, அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் திங்கள் கிழமை கந்தர்வகோட்டையில் நடை பெற்றது. இதில் கட்சியின் கந்தர்வ கோட்டை வடக்கு மற்றும் தெற்கு கமிட்டி களின் சார்பில் வளர்ச்சி நிதியாக வழங்கப்பட்ட ரூ.5 லட்சத்தை பெற்றுக் கொண்டு அவர் பேசியதாவது: சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்ன துரை பேசும்போது, தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்தோ, வேறுபல திட்டங் களுக்கோ கமிசன் கொடுக்கிறேன் என்று யாராவது என்னை வந்து சந்திக்கக்  கூடாது என பகிரங்கமாக மேடையில் அறிவிக்கிறார். வேறு கட்சியில் இதைப்  பார்க்க முடியுமா? இதைத்தான் நாங்கள்  கம்யூனிஸ்ட் ‘கெத்து’ என்கிறோம். கம்யூனிஸ்டுகள் மக்கள் மன்றத் தையே உயர்வாக மதிக்கிறோம். அதே நேரத்தில் உங்களால் சட்டமன்ற உறுப்பி னராக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.சின்ன துரை உங்கள் கோரிக்கைகள் அனைத் தையும் படிப்படியாக நிறைவேற்று வார். இந்தத் தொகுதி மக்களின் பாதுகா வலனாக இருப்பார். மோடி மே 30 (திங்கள்) அன்றுடன்  தனது 8 ஆண்டுகால ஆட்சியை நிறைவு  செய்துள்ளார். அவர் ஆட்சிக்கு வந்தால்  கருப்புப் பணத்தை மீட்டு ரூ.15 லட்சத்தை  ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் போடுவேன் என்றார். ஆனால் ஒரு  பைசாகூட போடவில்லை. கருப்புப்பண மும், கள்ளப்பணமும்தான் அதிகரித்துள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை  கொண்டுவந்து ஏழை, எளிய மக்களை  கொடும் சித்ரவதைக்கு உள்ளாக்கினார். சமையல் எரிவாயுக்கான மானியத்தை வங்கியில் போடுவேன் என்றார். போட்டாரா? இன்றைக்கு ரூ.1115 கொடுத்து ஒரு சிலிண்டரை வாங்க வேண்டியுள்ளது. பெட்ரோல், டீசல்  மற்றும் அனைத்துவிதமான விலைவாசி களும் கட்டுக்கடங்காமல் எகிறிக் கொண்டு இருக்கிறது. நீதிமன்ற உத்தரவைக் காட்டி புறம்போக்குகளில் காலம் காலமாக குடி யிருந்து வரும் ஏழை மக்களின் வீடு களை அரசு இடித்து வருகிறது. அதே நேரத்தில் மிகப்பெரிய அளவில் ஆக்கிர மித்து கட்டியுள்ள பெரும் பணக்காரர்க ளின் கட்டிடங்களை இடிக்க அரசு தயங்கு கிறது. தில்லியில் எங்கள் கட்சியின் தலை வர் பிருந்தா காரத் தனி ஒருவராக நின்று  ஏழைகளின் வீடுகளை இடிப்பதைத் தடுத்து நிறுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சார்பில் கடந்த மே 6 ஆம் தேதி 5 லட்சத்துக் கும் அதிகமான மக்களைத் திரட்டி புறம் போக்குகளில் குடியிருக்கும் ஏழை மக்களை அப்புறப்படுத்தக் கூடாது. அவர் களுக்கு முறைப்படி பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினோம்.

அதற்குப் பிறகுதான் தமிழக முதல்வர் இனி மேல் சம்பந்தப்பட்ட மக்களின் அனுமதி  இல்லாமல் வீடுகளை இடிக்கமாட்டோம் என உறுதி அளித்தார். தஞ்சாவூருக்குப் பக்கத்தில் சாஸ்த்ரா  பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான பல ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளது. அவர் களைப் பாதுகாக்கும் விதமாக ஆக்கிர மிக்கப்பட்ட இடத்திற்கு இணையாக வேறு இடத்தைக் கொடுக்கலாம் என  அரசு அறிவித்துள்ளது. இது அப்பட்ட மாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போகும் நடவடிக்கையாகும். ஆக்கிர மிப்புகளை அகற்றுவதில் இருப்பவ னுக்கு ஒரு நீதி, இல்லாதவனுக்கு ஒரு  நீதி என்பதை எற்க முடியாது.  இவ்வாறு மதுக்கூர் ராமலிங்கம் குறிப்பிட்டார். கட்சியின் கந்தர்வகோட்டை தெற்கு  ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றியச் செயலாளர் ஜி.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஏ.ராமையன் உள்ளிட்டோர் பேசினர்.