புதுக்கோட்டை, பிப்.9- புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சியின் 15 ஆவது வார்டு வேட்பாள ராக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஞா.பாலமுருகன் போட்டியிடுகிறார்.
குடிசை வீட்டில்
பாலமுருகன் ஒரு எளிய விவசாயத் தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்தவர். தற்பொழுதும் பழுதடைந்துள்ள குடிசை வீட்டிலேயே வசித்து வருகிறார். மீன் வியா பாரம் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். பாலமுருகன் சிறுவயது முதலே பொதுத் தொண்டில் ஆர்வம் மிக்கவராக செயல்பட்டு வந்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு கட்சியிலும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேர்ந்து பணியாற்றி வரு கிறார். தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய குழு உறுப்பினராவும், கீரமங்கலம் நகர செய லாளராகவும் உள்ளார்.
நிவாரண உதவிகள்
வேட்பாளர் குறித்து அப்பகுதியினர் தெரிவிக்கையில், பாலமுருகன் எளிய குடும்பத்தில் பிறந்தாலும் தான் சம்பாதிக் கும் பெரும்பகுதியை ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காகவே செலவு செய்வார். கஜா புயலால் பாதிக்கப் பட்ட போது பல்வேறு பகுதிகளில் நிவார ணப் பொருட்களை திரட்டி, எங்களை காப் பாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார். அதேபோல, கொரோனா பெருந்தொற்று கால பொது முடக்கத்தின் போதும் எங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகை பொருட் கள் உட்பட ஏராளமான உதவிகளை கட்சியின் மூலமாகவும், தனக்கு உள்ள நட்பு வட்டத்தின் மூலமாகவும் திரட்டி எங்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்தார். அவர் வெற்றி பெற்றால் எங்களுக்கு மேலும் பாதுகாப்பாக இருப்பார். எனவே பாலமுருகனை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம் என்றனர்.
அடிப்படைப் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை
வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர் பாலமுருகன் தெரிவிக்கையில், “கீரமங்க லம் பேரூராட்சி மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக கடந்த காலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தொடர்ச்சியான பல்வேறு போராட் டங்களை முன்னெடுத்து வந்துள்ளோம். இந்நிலையில் பேரூராட்சியில் 15 ஆவது வார்டு வேட்பாளராக கூட்டணிக் கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்டுள்ளேன். நான் வெற்றி பெற்றால் எனது வார்டுக்கு உட்பட்ட பகுதி மக்களின் குடிநீர், தெரு விளக்கு சாலை உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை கொடுத்து பாடுபடுவேன். எந்தவித முறை கேடுகளுக்கும் இடம் தராமல் மக்களின் நலத்திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் கவனம் செலுத்துவேன்” என்றார். வேட்பாளர் வாக்கு கேட்டு செல்லும் போது பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், நெற்றியில் வெற்றித்திலகம் இட்டும் உற்சாக வரவேற்பு அளித்தது அவரது வெற்றியை உறுதி செய்வதாக அமைந்தது. வேட்பாளருடன் சிபிஎம் மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன், திமுக நகர செயலா ளர் சிவக்குமார், சிபிஎம் ஒன்றிய செயலாளர் எஸ்.மணிவண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எல்.வடிவேல், பி.சுசிலா உள்ளிட்ட பலர் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.