districts

img

ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 5 வரை புதுக்கோட்டை 7-வது புத்தகத் திருவிழா மன்னர் கல்லூரி திடலில் நடைபெறுகிறது

புதுக்கோட்டை, ஜூன் 20:-  புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறி வியல் இயக்கமும் இணை ந்து நடத்தும் 7-ஆவது புத்த கத் திருவிழா வரும் ஜூலை 27ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை புதுக்கோட்டை மன்னர் கல்லூரி திடலில் நடைபெற வுள்ளது.

இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா வியாழக்கிழ மை வெளியிட்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் புத்தகத் திருவிழா வுக்கான அறிவிப்புப் பதா கையை ஆட்சியர் வெளியிட, புத்தகத் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர்கள் பெற்றுக் கொண்டனர்.

விழாக் குழுத் தலைவ ராக ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா, ஒருங்கிணைப்புக் குழுவில் கவிஞர் தங்கம் மூர்த்தி, கவிஞர் நா.முத்து நிலவன், அ.மணவாளன், ஆர்.ராஜ்குமார், எஸ்.டி.பால கிருஷ்ணன், கவிஞர் ஜீவி, ம.வீரமுத்து, மு.முத்துக் குமார், த.விமலா, கவிஞர் மு.கீதா, கிரு~;ண வரதரா ஜன், ராசி.பன்னீர்செல்வம், எம்.ஸ்டாலின் சரவணன், இ.பவுனம்மாள், க.சதா சிவம் ஆகிய 15 பேர் இடம்பெற்றுள்ளனர். மேலும், வழிகாட்டும் குழுவில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா  பாண்டே உள்பட அனை த்துத் துறை மாவட்ட அலு வலர்களும் இடம்பெற்றுள் ளனர்.

வழக்கம்போல, தமிழ கத்தின் தலை சிறந்த பேச்சா ளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மாலை நேர நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகளும், அறிவியல் அறிஞர்களுடன் உரையா டல், அறிவியல் விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட வுள்ளன. மேலும், புத்தகத் திரு விழா குறித்த விழிப்பு ணர்வை மாவட்டம் முழு வதும் ஏற்படுத்தும் வகை யில், லட்சக்கணக்கானோ ரைப் பங்கேற்கச் செய்யும் புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்ச்சியும், விழிப்புணர்வு ஊர்வலங்களும், மாணவர் போட்டிகளும் ஜூலை 1-ஆம் தேதி முதலே நடத்தப்பட வுள்ளதாக ஒருங்கிணை ப்புக் குழுவினர் தெரி வித்தனர்.