பொன்னமராவதி, ஜூலை 18- புதுக்கோட்டை மாவட்டம், பொன்னம ராவதி அருகே உள்ள காரையூர் மேம் படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் அதிக கவனம் தேவைப்படும் தாய் மார்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் 70-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பங்கேற்றனர் இதில் 15 கர்ப்பிணிகள் உயர் சிகிச்சைக்காக புதுக் கோட்டை ராணியார் மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். முகாமில் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் மற்றும் ரத்தப் பரிசோதனை செய்து ரத்தசோகை உள்ள வர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கி னர். முன்பு ரத்த பரிசோதனை மற்றும் ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு ரத்தம் ஏற்றுவது உள்ளிட்ட சிகிச்சைகளுக்காக புதுக்கோட்டை சென்ற நிலையில் தற்போது அனைத்து வகை ரத்த பரிசோதனைகளும் காரையூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செய்யப்படுவதாக வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் தெரிவித்துள்ளார்.முகாமில் மருத்துவர்கள் சுஜிதா,மனோஜ் ஆகி யோர் பங்கேற்றனர்.