districts

உழவர் கடன் அட்டை பெறாத விவசாயிகளுக்கு ஏப்.24 முதல் மே 1 வரை சிறப்பு முகாம்

புதுக்கோட்டை,  ஏப்.22 - உழவர் கடன் அட்டை பெறாத விவசாயிகள் 24.4. 2022 முதல் 1.5.2022 வரை  பஞ்சாயத்துகளில் நடைபெற வுள்ள சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கூறுகையில், இந்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர்  நலத்துறையால் ‘உழவர் களுடனான கூட்டிணைவே நமது முன்னுரிமை’ என்ற  சிறப்பு முகாம் நாடு முழுவ தும் 24.4.2022 முதல் 1.5.2022 வரை நடத்தப்படவுள்ளது. இதுவரை உழவர் கடன்  அட்டை பெறாத விவசாயி கள் இந்த முகாம்களில் விண்ணப்பிக்கலாம். உழவர் கடன் அட்டை திட்டத்தின்கீழ் விவசாயிகள் பயிர்க் கடனாக ரூ.3 லட்சம்  வரையிலும், பால் பண்ணை,  கால்நடை பராமரித்தல், மீன் வளர்ப்பு போன்ற வேளாண் உபதொழில் செய்வோர்க்கு ரூ.2 லட்சம் வரையிலும் வங்கிக் கடன் பெற முடியும். இத்திட்டத்தின்கீழ் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை கடன் பெறலாம். உழவர் அட்டை மூலம் கடன் பெறும் விவசாயிகளிடம் 7  விழுக்காடு வட்டி வசூலிக்கப் படும். மேலும், இக்கடன் பெற்ற விவசாயிகள் நிர்ண யிக்கப்பட்ட காலக்கெடு விற்குள் முறையாகத் தவணை மாறாமல் திரும்பச்  செலுத்தினால் 3 விழுக்காடு வரை வட்டி மானியம் பெற லாம். உழவர் கடன் அட்டைத்  திட்டத்தின்கீழ் விவசாயி களுக்கு ரூ.1.60 லட்சம்  வரை எவ்விதப் பிணையமும்  இன்றிக் கடன் வழங்கப்படும். உழவர் கடன் அட்டை மூலம் கடன் பெறுவதற்கு விவசாயிகள் தங்களின் நில  ஆவணங்கள் (பட்டா, சிட்டா,  அடங்கல்), ஆதார் அட்டை (கட்டாயம்), பான் அட்டை இவற்றுடன் குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடை யாள அட்டை ஆகிய ஆவ ணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வங்கிக் கிளைகளிலும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

 விண்ணப்பதாரரின் கடன்  மனுக்கள் தகுதியின் அடிப்ப டையிலும், கிரெடிட் ஸ்கோர்  போன்ற கடன் அடைப்புத் திறன், PMFOY வலைதளத்தி லுள்ள விவசாயிகளின் விவ ரம், வங்கிகளின் சட்டதிட்டங் கள் ஆகியவற்றிற்கு உட்பட் டும், நிலம், பயிரீட்டு அளவு ஆகியவற்றைப் பொறுத்தும் கடன் வழங்கப்படும். விவ சாயிகளின் பூர்த்தி செய்யப் பட்ட கடன் விண்ணப்பத் தினை அதன் இணை ஆவ ணங்களுடன், நேரடியாக வங்கிக் கிளைகளில் சம்பந் தப்பட்ட வங்கி வணிகத் தொ டர்பாளர்கள் மூலமாகவோ, மாவட்ட வேளாண்மைத் துறை அலுவலகம், தோட்டக் கலைத் துறை அலுவலகம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம்  இவற்றில் ஏதேனும் ஒன்றிலோ  சமர்ப்பிக்கலாம். இதுவரை உழவர் கடன்  அட்டை பெறாத விவசாயி கள் இச்சிறப்பு முகாமில் உழவர் கடன் அட்டை பெற்றுப் பயன் பெறுமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறார் கள். மேலும் விவரங்களுக் குப் புதுக்கோட்டை மாவட்ட  முன்னோடி வங்கி மேலாளர், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் ஆகி யோரைத் தொடர்பு கொள்ள லாம் என்றார்.

;