districts

விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம்

புதுக்கோட்டை, டிச.2-  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தில், மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங் கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளை யாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். கடந்த 2 ஆண்டுகளில் ஒரு முறையாவது உலக  தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்க ளில் இடம் பெற்றிருக்க வேண்டும் அல்லது  கடந்த 2 ஆண்டு காலங்களில் ஒலிம்பிக் அல்லது உலக சாம்பியன்ஷிப் போட்டி களில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.  ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன் வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல் 8 இடங்க ளில் இடம் பெற்றிருக்க வேண்டும். கடந்த  4 ஆண்டுகளில் தேசிய அளவிலான போட்டி களில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்றிருக்க வேண்டும். அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்களால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான சீனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றிருக்க வேண்டும். 01.12.2022 அன்று 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.  அரசு, அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள விளையாட்டு அமைப்புகளால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டி களில் தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்ற வர்கள் 01.12.2022 அன்று 20 வயதுக்கு உட்பட் டவராக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அவர்தம் காப்பாளர் உட்பட தங்கள் முழுமையான விவரங்கள் மற்றும்  2 ஆண்டு கால இலக்குகள் குறித்த விவ ரங்களுடன் எஸ்டிஏடி (SDAT) உடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். பன்னாட்டு அளவிலான போட்டிகளில் தொ டர்ந்து பதக்கங்கள் வெல்பவர்களுக்கு கூடு தல் கால நீட்டிப்பு வழங்கப்படும்.  எலைட் திட்டத்தில் ரூ.25 லட்சம் வரை  அதிகப்பட்ச உதவித்தொகை வழங்கப் படும். எம்ஐஎம்எஸ் (MIMS) திட்டத்தில் ரூ.10  லட்சம் வரை அதிகப்பட்ச உதவித்தொகை வழங்கப்படும். சிடிஎஸ் (CDS) திட்டத்தில் ரூ.2 லட்சம் வரை அதிகப்பட்ச உதவித் தொகை வழங்கப்படும்.  இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு  விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள முகவரியான www.sdat.tn. gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை 15.12.2022 மாலை 5 மணி வரை சமர்ப்பிக் கலாம்.  கூடுதல் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட பிரிவு அலுவலக தொலைபேசி 04322-222187 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கவிதா  ராமு தெரிவித்துள்ளார்.