புதுக்கோட்டை, மார்ச் 21- 2023-2024-ஆம் ஆண்டிற்கான நலிந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உத வித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரி வித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச தகுதிகளான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற் றிருக்க வேண்டும். சர்வதேச, தேசிய போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்று இருத்தல் வேண்டும். தகுதியான விளையாட்டுப் போட்டிகள் ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையி லான போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வயது வரம்பு 2023 ஆம் வருடம் ஜனவரி மாதம் (31.01.2023) 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழகத்தை சேர்ந்தவர் களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்ற வர்களாகவும் இருத்தல் வேண்டும். மாத வருமானம் ரூ. 15,000-க்குள் இருத்தல் வேண்டும். எனவே, புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு வீரர் கள் மேற்காணும் தகுதியுடையோர்கள் விண்ணப்பங் களை இணையதள முகவரி (www.sdat.tn.gov.in)-யில் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் விபரங்க ளுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலு வலர்களின் தொலைபேசி எண் 7401703498 தொடர்பு கொள்ளலாம்.