districts

வேங்கைவயல் சம்பவத்தில் மேலும் 10 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை

வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக புதிதாக 10 பேருக்கு டி.என்.ஏ. ரத்த மாதிரி பரிசோதனை எடுக்க உத்தரவிடக் கோரி, சிபிசிஐடி  காவல் துறையினர் மாவட்ட வன்கொ டுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ங்கைவயல் குடிநீர் தொட்டியில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் மனிதக் கழிவு கலக்கப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து நேரடி சாட்சி யாரும் இல்லாததால், டிஎன்ஏ  பரிசோதனை உள்ளிட்ட அறிவியல் பூர்வமான முறையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த வழக்கில் இதுவரை சுமார் 4 சிறுவர்கள் உட்பட 31 பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதில் காவலர் ஒருவருக்கு குரல் மாதிரி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவம் நடந்து 10 மாதங்க ளாகி விட்ட நிலையில் இதுவரை நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில் வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக புதிதாக வேங் கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 10 பேருக்கு டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை எடுக்க கோரி, சிபிசிஐடி காவல் துறையினர் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு  மீதான விசாரணை வரும் 29ஆம் தேதி நடைபெறுகிறது.