districts

img

பொற்பனைக்கோட்டையில் செம்பு ஆணிகள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை, ஜூலை 22 - பொற்பனைக் கோட்டை யில் நடைபெற்று வரும்  இரண்டாம் கட்ட அக ழாய்வில் செம்பினால் ஆன ஆணிகள் கிடைத்துள்ளன.

புதுக்கோட்டை மாவட் டம் பொற்பனைக்கோட்டை யில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற முதல்  கட்ட அகழாய்வில், கழிவு நீர் வாய்க்கால் போன்ற செங்கல் தளம், வட்ட  வடிவ செங்கல் கட்டுமானம்  போன்றவை வெளிப்பட்டன. மேலும், தங்க மூக்குத்தி, எலும்பு முனைக் கருவிகள் உள்பட 500-க்கும் மேற்பட்ட  தொல்பொருட்கள் கிடைத்தன.

இதன் தொடர்ச்சியாக கடந்த ஜூன் 18 அன்று இரண்டாம் கட்ட அக ழாய்வை முதல்வர் ஸ்டா லின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இதில்,  அரண்மனைத் திடலுக்கு தெற்கே 280 செ.மீ. நீளம் மற்றும் 218 செ.மீ. அகலமும் கொண்ட ஒரு செங்கல் தளம் வெளிப்பட்டது. மேலும் 26 நாட்களுக்குள் 424 தொல்பொருட்களும் கிடைத்தன.

இந்நிலையில், ஒரு குழியில் செம்பினால் ஆன 4 ஆணிகளும், இன்னொரு குழியில் ஒரு செம்பு ஆணி யும் கிடைத்துள்ளன. இவற்றின் எடை சுமார் 2 கிராம். நீளம் 2.3 செ.மீ, அக லம் 1.2 செ.மீ.

இதுவரை நடந்த அகழாய் வில் இரும்பினால் ஆன ஆணிகள் கிடைத்த நிலை யில், தற்போது செம்பு ஆணி கள் கிடைத்துள்ளன. மேலும், 3 செ.மீ நீளமுள்ள அஞ்சனக்கோல் எனப்படும் மை தீட்டும் குச்சி ஒன்றும் கிடைத்திருப்பதாக அக ழாய்வு இயக்குநர் த.தங்க துரை தெரிவித்தார்.