districts

img

ஜனநாயக அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் பட்டியல் சாதி மக்களின் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த ஆதிக்க சாதி வெறியர்களை எஸ்சிஎஸ்டி வன்கொடுமை வழக்கில் கைது செய்ய வலியுறுத்தி ஜனநாயக அமைப்புகள் சார்பில் வேலூரில் வழக்கறிஞர் சிவா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வி.குபேந்திரன் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), திலீபன், அரவிந்த்ஜெயசூர்யா (திராவிடர் விடுதலை கழகம்), பி.காத்தவராயன் (விசிக), அன்பரசன் (திராவிடர் கழகம்), வழக்கறிஞர் பாஸ்கர் ஆகியோர் பேசினர்.