districts

img

மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலந்ததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலந்ததைக் கண்டித்து காவேரி நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் மாவட்டச் செயலர் த.செங்கோடன் தலைமை வகித்தார். மாநிலத் துணைச் செயலர் மு.வீரபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து ஆகியோர் கண்டன உரையாற்றினர்.