districts

சிபிஎம் போராட்டம் வெற்றி சொத்து வரியை மறு சீராய்வு செய்ய புதுக்கோட்டை நகராட்சி முடிவு

புதுக்கோட்டை, ஏப்.7-  உயர்வு செய்யப்பட்ட வரி விதிப்புகளை மறு சீராய்வு செய்ய  புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்ச்சியான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.  இதுகுறித்து கட்சியின் நகரச்  செயலாளர் ஆர்.சோலையப்பன் கூறுகையில், ‘‘புதுக்கோட்டை நகராட்சியில் எந்தவித வரை முறைகளுக்கும் உட்படுத்தாமல் கடந்த ஆண்டைவிட பல மடங்கு  சொத்துவரியை உயர்த்தியுள்ள தாக பொதுமக்கள் குற்றம்சாட்டி னர். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் எங்கள் கட்சி அலுவலகத்திற்கும் வந்து நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினார். எங்கள் கட்சி யின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில்  பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைக்கப் பெற்றது. உதாரணத்திற்கு கடந்த ஆண்டு  பெரியார் நகர் பிளாட் எண்:1059-இல் ரூ.3538-ஆக இருந்த குடி யிருப்பு வரி இந்த ஆண்டு ரூ.19, 076 ஆகவும், கணேஷ் நகர் 4-ஆம்  வீதியில் ஒரு வீட்டிற்கு ரூ.2092-ஆக  இருந்த வீட்டு வரி ரூ.8,222-ஆகவும்,  என்ஜிஓ காலனியில் பிளாட் எண்:  46-இல் ரூ.2,300-ஆக இருந்த குடி யிருப்பு வரி ரூ,19,840 உயர்த்தப் பட்டது. இதேபோல நகராட்சி முழு வதும் பல்வேறு விதமான சொத்து வரிகளும் உயர்த்தப்பட்ட கண்டு பிடிக்கப்பட்டது. குடியிருப்புப் பகுதியின் தன்மையின் அடிப்படையில் பதிவுத் துறை வழிகாட்டி மதிப்பு கடந்த ஆண்டுவரை 6 வகைகளாகப் பிரிக்கப்பட்டு வரிக்கான வரம்பு  நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் இரண்டு வகை களாக மட்டுமே பிரிக்கப்பட்டு உள்ளது. அந்தந்தப் பகுதியின்  அமைவிடம், அடிப்படை வசதி உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டு இது வகைப்படுத்தப்படவில்லை.

இதனால், மிகவும் பின்தங்கிய பகுதி மக்களும் அளவுக்கு அதிக மான வரிகளைக் கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வரிவசூல் பணியிலும் மிகப்பெ ரிய அளவில் குறைபாடு உள்ள தாகத் தெரிய வருகிறது. கடந்த 2021- 2022-ஆம் நிதியாண்டிற்கு வசூ லிக்க வேண்டிய ரூ.1144.59 லட்சத் தில் ரூ.702.23 லட்சம் மட்டுமே வசூல் செய்யப்பட்டது. 2020-2021-ஆம் நிதியாண்டில் வசூலிக்க வேண்டிய சொத்துவரியில் 59  விழுக்காடு மட்டுமே வசூலிக்கப் பட்டுள்ளது. இது வரி வசூல் பணி யில் அதிகாரிகளின் மெத்தனப்  போக்கையும், பொறுப்பின்மை யையும் காட்டுகிறது. சென்னை உயர்நீதிமன்றம் சொத்துவரி மதிப்பீடு வெளிப்படை யாகவும், வரி மதிப்பீடு செய்யும்  அலுவலர்கள் ஊழல் நடவடிக்கை களை தவிர்க்கும் பொருட்டும், புதிய கட்டிடங்களுக்கு சொத்து வரி மதிப்பீடு குறித்த வழிமுறை களை அனைவரும் அறிந்துகொள் ளும் வகையில் வெளிப்படை யாக வெளியிடுமாறு வழிகாட்டி யுள்ளது. புதுக்கோட்டை நகராட்சி  நிர்வாகமோ எந்தவித வரையறை களுக்கும் உட்படுத்தாமல் தான் தோன்றித் தனமாக வரிவிதிப்பில் ஈடுபட்டுள்ளது எங்களது கள ஆய்வில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சிபிஎம் சார்பில் இத்தகைய மோசடிகளை அம்பலப்படுத்தி நகர் முழுவதும் தெருமுனைப் பிரச்சாரம், நக ராட்சி அலுவலகம் முற்றுகை என  பலகட்டப் போராட்டங்களை நடத்தி யுள்ளோம்.

தமிழ்நாடு முதலமைச்ச ரின் தனிப்பிரிவிற்கும் புகார்மனு அளித்துள்ளோம். இதனைத் தொடர்ந்து புதுக் கோட்டை நகராட்சி அலுவலர் நாக ராஜன் கட்சி நிர்வாகிகளுடன் வியா ழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தி னார். பேச்சுவார்த்தையில் கட்சி யின் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் ஜி.நாகராஜன், நகரச் செயலா ளர் ஆர்.சோலையப்பன், மாவட்டக் குழு உறுப்பினர் அ.மணவாளன், நகரக்குழு உறுப்பினர்கள் கி.ஜெய பாலன், எம்.ஏ.ரகுமான் உள்ளிட் டோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில், 2022-23-ஆம் ஆண்டு சொத்துவரி பொதுச் சீராய்வு செய்யப்பட்டதில் குறிப் பிட்ட கணக்கீட்டைவிட உயர்வு  செய்யப்பட்ட வரி விதிப்புகளைக் கணக்கெடுத்து அவ்வரி விதிப்பு களுக்கு மறு சீராய்வு செய்து உரிய வரி விதிப்பு விகிதத்தில் வரி  விதிப்பு செய்ய நகர்மன்றத்தில் தீர்மானம் வைக்கப்பட்டு, அனு மதிக்கப்பட்ட தீர்மானத்தினை அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அரசின் அனுமதிபெற்று வரி  உயர்விற்கான பணிகள் முடிவடை யும்வரை உயர்வு செய்யப்பட்ட வரித் தொகையை வசூல் செய்வதை நிறுத்தி வைக்க கோரப்பட்டது குறித்து நடவடிக்கை மேற்கொள் வது எனவும் கூட்டத்தில் தீர்மா னிக்கப்பட்டது.  இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்ச்சியான போராட் டத்திற்குக் கிடைத்த வெற்றியா கும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

;