districts

img

இலங்கை கடற்படையினரை கண்டித்து ஜெகதாப்பட்டிணம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி, நவ.30-  புதுக்கோட்டை மாவட்  டம் அறந்தாங்கி அருகே  உள்ள ஜெகதாப்பட்டிணத்தை சேர்ந்த 20 மீனவர்களை செவ்வாயன்று கைது செய்து,  4 படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை யினரை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் ஜெக தாபட்டிணம் மீனவர் சங்க  அலுவலகத்தின் முன்பு ஆர்ப்  பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில், ஒன்  றிய அரசும், மாநில அரசும் உடனடியாக இதில் தலை யிட்டு கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறி முதல் செய்யப்பட்ட படகு களையும் மீட்டுத் தர வலி யுறுத்தினர்.  ஜெகதாப்பட்டிணம் துறை முகத்திலிருந்து 155க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திரும்பப் பெறும் வரை தொடர் வேலை நிறுத்தம் செய்வதாக மீனவர்கள் அறி வித்துள்ளனர்.